‘ககன்யான்’ திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘சந்திரயான்-4’ திட்டத்தின் மூலம் இந்தியா மீண்டும் நிலவுக்கு செல்ல இருப்பதாகவும், இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், மேலும் சந்திரயான்-4’ விண்கலத்தை நிலவுக்கு இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளது என்றார் அதை தொடர்ந்து அவர் பேசுகையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

 

 

Leave a comment